ஆனால், டிரம்ப் ,ஜோ பிடன் வெற்றியை ஏற்க மறுத்து வருகிறார். தேர்தலில் முறைகேடு நடந்தது என்கிற ஆதாரமற்ற குற்றச்சாட்டை தொடர்ந்து முன்வைத்து வருகிறார். அதே சமயம் ஜோ பிடன் தான் ஆட்சி அமைப்பதற்கான பணிகளை இப்போதே தொடங்கி விட்டார். தனது தலைமையில் அமையும் புதிய அமைச்சரவையை அவர் ஏற்கனவே அறிவித்து விட்டார்.
இந்நிலையில் அமெரிக்காவில் “தேங்க்ஸ் கிவிங் டே” எனப்படும் அறுவடை திருநாளையொட்டி ஜனாதிபதியாகத் தேர்வு செய்யப்பட்டுள்ள ஜோ பிடன் நேற்று நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.
உங்கள் அதிபரிடமிருந்து உண்மையைக் கேட்க நீங்கள் எப்போதும் தகுதியானவர்கள் என்று நான் நம்புகிறேன். இந்த வைரஸின் வளர்ச்சியை நாம் குறைக்க வேண்டும். டாக்டர்கள், நர்சுகள், முன்னணி களப்பணியாளர்களுக்கு நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். எங்கள் சக குடிமக்களுக்கு நாங்கள் கடமைப்பட்டிருக்கிறோம்.
கொரோனா நமக்கு வலியையும், இழப்பையும், விரக்தியையும் கொண்டுவந்தது மற்றும் பல உயிர்களை பறித்தது. அது நம்மை பிளவு படுத்தியது. கோபப்படுத்தியது. ஒருவருக்கொருவர் எதிராக அமைந்தது. ஆனால் நாம் நினைவில் கொள்ள வேண்டும். நாம் வைரசுடன் போராடுகிறோம். ஒருவருக்கு ஒருவர் அல்ல.
நாம் நமது முதுகெலும்புகளை இரும்பு போல ஆக்க வேண்டும். நமது முயற்சிகளை இரட்டிப்பாக்க வேண்டும். கொரோனாவுடன் போராட நம்மை நாமே மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
கொரோனா காலத்தில் வரும் இந்த அறுவடை திருநாள் கொண்டாட்டத்தை மக்கள் சூழ்நிலைக்கு ஏற்றாற்போல் மாற்றியமைத்துக்கொள்ள வேண்டும்.