கங்கார்-
மலேசியா-தாய்லாந்து எல்லையில் கடத்தல் நடவடிக்கைகளைக் கண்டறிவதற்காக -ஓப் பெந்தெங்- என்ற குறியீட்டு பெயரில் நாடு தழுவிய நடவடிக்கையின் கீழ் ஒருங்கிணைந்த ரோந்துப் பணிகளில் வான்வழி கண்காணிப்புகளுக்கு ட்ரோன்களைப் பயன்படுத்துதல் குறைந்துள்ளன.
இதற்கு முன்னர் நில ரோந்துப் பணியாளர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட திறன்கள் இருந்தன. ஆனால், ஏர் விங் யூனிட் , தேசிய பணிக்குழுவின் (என்.டி.எஃப்) கீழ் ட்ரோன் யூனிட் ஆகியவற்றின் உதவியுடன் எல்லைக் கட்டுப்பாட்டை மேலும் மேம்படுத்தியதாக GOF 3 ஆவது படைப்பிரிவினர் கட்டளை அதிகாரி சுப்ரிண்டெண்டண்ட் ரோஸ்மான் காஸ்மான் தெரிவித்தார்.
தற்போது, உதவியுடன், எல்லைப் பகுதியின் கிட்டத்தட்ட 100 சதவீதத்தை கண்காணிக்க முடியும் என்றார் அவர்.
மறைந்த சார்ஜெண்ட் பஹாருடீன் ராம்லி, சார்ஜெண்ட் நோரிஹான் ஆகியோரின் குடும்பங்கள் சார்பாக, நாடாளுமன்ற உறுப்பினரும் பெர்லிஸ் பாரிசன் நேஷனல் தலைவருமான டத்தோ செரி ஷாஹிடான் காசிம் வழங்கிய பங்களிப்புகளைப் ரோஸ்மான் பெற்றுக்கொண்டார்.
செவ்வாய்க்கிழமை (நவம்பர் 24), பாடாங் பெசாரில் உள்ள டிஎஸ் 9 கட்டுப்பாட்டு இடத்திலிருந்து சுமார் 600 மீட்டர் தொலைவில், கடத்தல்காரர்களுடன் மோதிய பின்னர், அவரது சகா, நோரிஹான், 39, பலத்த காயமடைந்தார்.