இஸ்லாமாபாத்:
பின்னர் பலூசிஸ்தானில் சிறுபான்மையினராக இருக்கும் குறிப்பிட்ட ஓர் இனத்தைச் சேர்ந்த 11 தொழிலாளர்களை மட்டும் பிடித்து வைத்துக்கொண்டு மற்ற தொழிலாளர்களை அனுப்பி விட்டனர். அதனைத் தொடர்ந்து அந்த 11 தொழிலாளர்களை அங்கு உள்ள ஒரு மலைப்பகுதிக்கு அழைத்து சென்ற பயங்கரவாதிகள், அவர்களை வரிசையாக நிற்க வைத்து சுட்டுக் கொன்றனர்.
இந்த சம்பவம் பலூசிஸ்தானில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதலுக்கு உடனடியாக எந்த ஒரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. இதற்கிடையில் சுரங்கத் தொழிலாளர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்துக்கு பாக்கிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில் ‘‘11 அப்பாவி நிலக்கரி சுரங்கத் தொழிலாளர்கள் சுட்டுக் கொல்லப்பட்டது பயங்கரவாதத்தின் மற்றொரு கோழைத்தனமான , மனிதாபிமானமற்ற செயலாகும். இந்த கொலையாளிகளை கைது செய்து நீதிக்கு முன் கொண்டுவர தேவையான அனைத்தையும் செய்யுமாறு காவல், நீதித் துறையைக்க் கேட்டுக்கொள்கிறேன். உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பத்தோடு அரசு துணை நிற்கும்’’ என அவர் தெரிவித்துள்ளார்.