6 மாநிலங்களில் நடமாட்ட கட்டுப்பாட்டு ஆணை

கோலாலம்பூர், ஜன 1-

நாட்டில் புதிதாக 2433, கோவிட்-19 தொற்றை சம்பவங்களை தொடர்ந்து வரும் புதன்கிழமை நள்ளிரவு 12.01 முதல் ஜனவரி 26 வரை ஆறு மாநிலங்களில் 14 நாட்களுக்கு நடமாட்ட கட்டுப்பாட்டு ஆணையை (பி.கே.பி) செயல்படுத்த அரசு முடிவு செய்துள்ளது என்று டான் ஸ்ரீ முஹைதீன் யாசின் தெரிவித்தார்.

சம்பந்தப்பட்ட ஆறு மாநிலங்கள் பினாங்கு, சிலாங்கூர், கூட்டுறவு பிரதேசங்கள் (கோலாலம்பூர், புத்ராஜெயா, லாபுவான்), மலாக்கா, ஜோகூர் மற்றும் சபா என்று பிரதமர் கூறினார்.

இது தவிர, நிபந்தனைக்குட்பட்ட நடமாட்ட கட்டுப்பாட்டு ஆணை (பி.கே.பி.பி) பஹாங், பேராக், நெகேரி செம்பிலன், கெடா, திரங்கானு மற்றும் கிளந்தான் ஆகிய ஆறு மாநிலங்களுக்கு விதிக்கப்படும்.

மேலும் இரண்டு மாநிலங்கள், அதாவது பெர்லிஸ் மற்றும் சரவாக், மறுசீரமைப்பு  கட்டுப்பாட்டு ஆணை (பி.கே.பி.பி) மூலம் செயல்படுத்தப்படும்.

“இரண்டு வார காலம் முடிவடைவதற்கு முன்னர் பி.கே.பியை நடைமுறைப்படுத்துவது நிறுத்தப்படுமா அல்லது தொடரப்படுமா என்பதை தீர்மானிக்க சுகாதார அமைச்சு நிர்ணயிக்கும்” என்று பிரதமரின்  நேரடி ஒளிபரப்பில் சிறப்பு செய்தியை வழங்கும்போது கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here