புத்ராஜெயா: மலேசியாவில் புதன்கிழமை (ஜனவரி 27) 3,680 புதிய கோவிட் -19 சம்பவங்கள் பதிவாகியுள்ளன. அதே நேரத்தில் தீவிர சிகிச்சையில் உள்ள நோயாளிகளின் எண்ணிக்கை புதிய உயர்வை எட்டியுள்ளது.
தீவிர சிகிச்சை பிரிவுகளில் இப்போது 314 நோயாளிகள் உள்ளனர். வென்டிலேட்டர் ஆதரவில் 122 பேர் உள்ளனர். நாட்டில் உறுதிப்படுத்தப்பட்ட மொத்த சம்பவங்களின் எண்ணிக்கை 194,114 வரை. அதே 24 மணி நேர இடைவெளியில், நாட்டில் கோவிட் -19 க்கு ஏழு பேர் இறந்தனர். மலேசியாவின் கோவிட் -19 இறப்பு எண்ணிக்கை இப்போது 707 ஆகும்.