லண்டன்:
இந்த நிலையில் சர்ச்சைக்குரிய தேசிய பாதுகாப்பு சட்டத்தை சீனா ஹாங்காங்கில் அமல்படுத்தியதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக தங்கள் நாட்டின் பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் தங்கள் நாட்டில் 5 ஆண்டுகள் வசிப்பதற்காக விண்ணப்பிக்கலாம் என்கிற புதிய விசா திட்டத்தை இங்கிலாந்து அரசு அண்மையில் அறிவித்தது.
மேலும் ஹாங்காங் மக்களுக்கு இங்கிலாந்து வழங்கியிருந்த பாஸ்போர்ட் இனி செல்லாது எனவும் சீனா அறிவித்தது.
இந்த நிலையில் சீனாவின் கடும் எதிர்ப்பையும் மீறி ஹாங்காங் மக்களுக்கான புதிய விசா திட்டத்தை இங்கிலாந்து அரசு நேற்று தொடங்கியது.
ஹாங்காங் மக்களுக்கான புதிய விசா திட்டம் குறித்து இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறுகையில், “இந்த நடவடிக்கை இங்கிலாந்தின் முன்னணி காலனியான ஹாங்காங்குடன் இங்கிலாந்தின் வரலாறு, நட்பின் ஆழமான உறவுகளை கவுரவிக்கிறது என்றார் அவர்.