ஸ்ரீநகர்:
ஜம்மு காஷ்மீரின் எல்லைப்பகுதிகளில் பாக்கிஸ்தான் ராணுவம் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தொடர்ந்து அத்துமீறலில் ஈடுபடுகிறது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய ராணுவமும் தாக்குதல் நடத்துகிறது. இதில் இரு தரப்பிலும் பாதிப்புகள் ஏற்படுகின்றன.
பாதுகாப்பு பணியில் இந்திய ராணுவ வீரர்கள்
இந்நிலையில், ரஜோரி மாவட்டம் சுந்தர்பானி எல்லையில் நேற்று இந்திய நிலைகளைக் குறிவைத்து பாக்கிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியது. இந்திய ராணுவ வீரர்களும் பதிலடி கொடுத்தனர். பாக்கிஸ்தான் நடத்திய தாக்குதலில் பலத்த காயமடைந்த இந்திய வீரர் லட்சுமணன் உயிரிழந்தார்.