ஆழ்நிலை தியானத்தை இந்தியாவிலும் மேற்கத்திய நாடுகளிலும் புகழ்பெறச் செய்த ஆன்மிகக் குரு மகேஷ் யோகி
ஆன்மிகக் குரு மகேஷ் யோகி
ஆழ்நிலை தியானத்தை இந்தியாவிலும் மேற்கத்திய நாடுகளிலும் புகழ்பெறச் செய்தவர். ஐக்கிய அமெரிக்கா, மெக்சிக்கோ, ஐக்கிய இராச்சியம், சீனா உள்ளிட்ட பல உலக நாடுகளிலும் யோகியின் ஆழ்நிலை தியான மையங்கள், கல்வி நிறுவனங்கள் உள்ளிட்டவை உள்ளன.
மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் மகேஷ் யோகி. 1939- ஆம் ஆண்டளவில் மகேஷ் யோகி பிரமானந்த சரஸ்வதி சுவாமிகளின் சீடராகி, 1941 முதல் 1953 வரையில் இமயமலைச் சாரலில் ஆசிரமம் நடத்தி ஆழ்நிலை தியானத்தை போதித்து வந்தார்.
மகேஷ் யோகியின் முதலாவது உலகப் பயணம் 1958- இல் ஆரம்பமானது. ஐக்கிய அமெரிக்காவில் தனது தியான முறையை அறிமுகப்படுத்தினார்.
1960-களில் மேற்கத்திய பாடகர்கள் பீட்டில்ஸ் குழுவினருக்கு குருவாக விளங்கினார். இதைத் தொடர்ந்து மகேஷ் யோகி உலகப் புகழ் பெற்றார். 1990- இல் இருந்து நெதர்லாந்தில் விளாட்ராப் என்ற இடத்தில் தனது ஆசிரமத்தை அமைத்து அங்கிருந்து சேவையாற்றினார்.
இவர் 2008- ஆம் ஆண்டு பிப்ரவரி 5- ஆம் தேதி காலமானார்.