இந்தியா அனுப்பிய 5 லட்சம் டோஸ் தடுப்பூசி மருந்து ஆப்கானிஸ்தான் சென்றடைந்ததாகவும், நட்பு நாடுகளுக்கு இந்தியா எப்போதும் துணை நிற்கும் என்றும் வெளியுறவுத்துறை மந்திரி கூறி உள்ளார்.
இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் கொரோனா தடுப்பூசி மருந்துகளை நல்லெண்ண அடிப்படையில் அண்டை நாடுகள் பொருளாதார ரீதியாக பின்தங்கிய நிலையில் உள்ள நாடுகளுக்கு இந்தியா வழங்கி வருகிறது.
இதன்படி பூடான், மாலத்தீவு நேப்பாளம், வங்காளதேசம், மியான்மர், மொரிசியஸ், சீஷெல்ஸ், இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு இலவசமாகத் தடுப்பு மருந்துகள் அனுப்பி வைக்கபட்டன.
அவ்வகையில், ஆப்கானிஸ்தான் நாட்டிற்கு இன்று 5 லட்சம் டோஸ் தடுப்பூசி மருந்து அனுப்பி வைக்கப்பட்டது. மும்பையில் இருந்து ஏர் இந்தியா விமானத்தில் அனுப்பி வைக்கப்பட்ட மருந்து காபூல் சென்றடைந்தது.