கொரோனா காரணமாக இப்போது சானிட்டைசர் பயன்பாடு அதிகமாகி வருகிறது.
இந்நிலையில் அடிக்கடி சானிட்டைசர் உள்ளிட்ட கிருமி நாசினிகளை கைகளில் பயன்படுத்துவதால் கைரேகை அழியும் ஆபத்து உள்ளதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
சானிட்டைசர்கள் பயன்படுத்தினால் மேல் தோல் அழியும் என்றும் அதற்குப் பதிலாக வைட்டமின் ஏ கொண்ட சோப்களைப் பயன்படுத்தினால் மீண்டும் வேகமாக தோல் வளர்ந்துவிடும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
கொரோனா பரவலின்போது சோப்பை விட சானிட்டைசர்களே பாதுகாப்பானது என மருத்துவ நிபுணர்கள் கூறினர். பின்னர் இப்போது சோப் பயன்படுத்துவதே சிறந்தது எனக் கூறி வருகின்றனர். இதனால் மக்கள் குழப்பத்துக்கு ஆளாகியுள்ளனர்.