சிங்கப்பூரில் உள்ளூர் பல்கலைக்கழகங்களில் கல்வி பயின்ற பட்டதாரிகளில் பெரும்பாலோருக்கு சென்ற ஆண்டு வேலை கிடைத்ததுடன் அவர்களின் சராசரி சம்பளமும் உயர்ந்த நிலையிலேயே இருந்தது.
அத்துடன், தகவல், மின்னிலக்கத் தொழில்நுட்பத் துறைகளில் முழுநேர வேலை கிடைக்கப் பெற்றவர்கள் மற்றவர்களைவிட மிக உயர்ந்த சம்பளத்தைப் பெறும் நிலையும் ஏற்பட்டது.
ஆனால், கொள்ளைநோய்ச் சூழலால் சென்ற ஆண்டு பல பட்டதாரிகள் பகுதிநேர வேலைகள், அல்லது வேலைப் பயிற்சியில் ஈடுபட்டனர். இதில் ஐந்தில் ஒரு பட்டதாரி பகுதிநேர வேலையில் ஈடுபட வேண்டிய நிலை ஏற்பட்டது.