ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியில் தென்ஆப்பிரிக்காவை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளரான ஸ்டெயின் லத்துக்கு முன்னதாகவே விலகினார்.
இந்த நிலையில் ஐ.பி.எல். பற்றிய தனது கருத்துக்கு ஸ்டெயின் வருத்தம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது டுவிட்டர் பதிவில், ‘ஐ.பி.எல். எனக்கு மட்டுமின்றி மற்ற வீரர்களுக்கும் சிறப்பானதாகவே அமைந்து இருக்கிறது. ஐ.பி.எல். போட்டியை மற்ற லீக் ஆட்டங்களுடன் ஒப்பிட்டு தரம் தாழ்த்தவோ? அல்லது அவமதிக்கவோ? நான் ஒருபோதும் நினைத்ததில்லை. சமூக வலைதளங்கள் பெரும்பாலும் தவறான அர்த்தங்களை வெளியிடக்கூடும். என்னுடைய கருத்து யாரையாவது வேதனைப்படுத்தி இருந்தால் அதற்காக வருத்தம் தெரிவித்து கொள்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார். ஸ்டெயின் ஐ.பி.எல். போட்டியில் 95 ஆட்டங்களில் ஆடி 97 விக்கெட்டுகள் வீழ்த்தி உள்ளார்.