-தயாரிக்கும் பணி மும்முரம்
இதனையொட்டி தேர்தல் நடைமுறை விதிகள் அமல்படுத்தப்பட்டு உள்ளது. கூட்டணி பங்கீடு பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு என தமிழக அரசியல் களம் சுறுசுறுப்பாக உள்ளது. கோவையில் பல்வேறு கட்சி தலைவர்கள் தங்கள் கூட்டணி கட்சிகளை ஆதரித்து பிரசாரம் செய்ய உள்ளனர். இந்தநிலையில் கோவையில் பிரசாரத்துக்கு தேவையான கட்சி கொடிகள் தயாரிக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
இதற்காக கடந்த ஜனவரி மாதம் முதல் கட்சி கொடிகள் தயாரிக்கும் பணிகளில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். ஈரோடு மாவட்டத்தில் இருந்து மொத்தமாக துணிகள் கொள்முதல் செய்யப்பட்டு அரசியல் கட்சிகளுக்கு ஏற்ப வண்ணமாக்கப்படுகிறது. அதன் பிறகு ஸ்கிரீன் பிரிண்டிங் முறையில் கொடிகளில் அந்தந்த கட்சிகளின் சின்னங்கள் பொறிக்கப்படுகிறது.
இதனை தொடர்ந்து கோவை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள தையல் தொழிலாளர்களிடம் கொடிகளை கட்டுவதற்கு நூல் பொருத்துவது, கொடிகளின் நான்கு புறங்களிலும் ஓரம் அடிப்பது உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. பணிகள் அனைத்து முழுமை பெறும் நிலையில் கொடிகள் விற்பனைக்காக கோவை, திருப்பூர், திருச்சி, சேலம், கரூர், நாமக்கல், மதுரை, ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு ஆர்டரின் பேரில் அனுப்பி வைக்கப்பட உள்ளது.