கர்ணன் படத்தின் 3- ஆவது பாடல் நாளை வெளியீடு

கர்ணன் படத்தில் இடம்பெற்றுள்ள திரெளபதையின் முத்தம் என்கிற பாடல் நாளை வெளியாகவுள்ளது.

பிப்ரவரி 18 அன்று சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில் தனுஷ் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள கர்ணன் படத்தின் கண்டா வரச் சொல்லுங்க பாடல் வெளியானது. கிடக்குழி மாரியம்மாள் , சந்தோஷ் நாராயணன் இணைந்து பாடியுள்ளார்கள். கிராமியப் பாடல் பாணியில் அமைந்துள்ள கண்டா வரச் சொல்லுங்க, ரசிகர்களிடம் அதிக வரவேற்பைப் பெற்றிரிக்கிறது.

2- ஆவது பாடலாக பண்டாரத்தி புராணம் வெளியானது. யுகபாரதி எழுதியுள்ள இப்பாடலை தேவா, ரீத்தா பாடியுள்ளார்கள். இப்பாடலுக்கும் ரசிகர்கள் நல்ல வரவேற்பை அளித்தார்கள்.

இந்நிலையில் 3- ஆவது பாடலான திரெளபதையின் முத்தம் நாளை (மார்ச் 11) வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கர்ணன் படம் திரையரங்குகளில் ஏப்ரல் 9 இல் வெளியாகவுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here