பிப்ரவரி 18 அன்று சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில் தனுஷ் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள கர்ணன் படத்தின் கண்டா வரச் சொல்லுங்க பாடல் வெளியானது. கிடக்குழி மாரியம்மாள் , சந்தோஷ் நாராயணன் இணைந்து பாடியுள்ளார்கள். கிராமியப் பாடல் பாணியில் அமைந்துள்ள கண்டா வரச் சொல்லுங்க, ரசிகர்களிடம் அதிக வரவேற்பைப் பெற்றிரிக்கிறது.
2- ஆவது பாடலாக பண்டாரத்தி புராணம் வெளியானது. யுகபாரதி எழுதியுள்ள இப்பாடலை தேவா, ரீத்தா பாடியுள்ளார்கள். இப்பாடலுக்கும் ரசிகர்கள் நல்ல வரவேற்பை அளித்தார்கள்.
இந்நிலையில் 3- ஆவது பாடலான திரெளபதையின் முத்தம் நாளை (மார்ச் 11) வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கர்ணன் படம் திரையரங்குகளில் ஏப்ரல் 9 இல் வெளியாகவுள்ளது.