எங்களுக்கு தடுப்பூசி வேண்டும்.. பிரிட்டனுக்கு இப்போது கொடுக்க முடியாது.

-இந்திய நிறுவனம் அதிரடி முடிவு.!!

பிரிட்டனுக்கு ஏற்றுமதி செய்யும் தடுப்பூசிகளை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக சீரம் இன்ஸ்டிடிட்யூட் ஆஃப் இந்தியாவின் தலைமை அதிகாரி தெரிவித்துள்ளார்.

உலகின் மிகப்பெரிய தடுப்பூசி உற்பத்தி துறையான சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா (எஸ்ஐஐ)நிறுவனம் உலகநாடுகளுக்கு தடுப்பூசி ஏற்றுமதி செய்து வருகிறது.

இந்தியாவில் இரண்டாவது கட்ட கொரோனா அலை பரவுவதால் இந்திய அரசாங்கம் தற்காலிகமாக தடுப்பூசி ஏற்றுமதியை நிறுத்தி வைத்துள்ளதாக தலைமை நிர்வாக அதிகாரி Adar poonawalla தெரிவித்துள்ளார். இதனால் பிரிட்டனில் தடுப்பூசி போடும் பணி பாதிக்கப்படும் என கூறப்படுகிறது.

பிரிட்டனுக்கு மார்ச் மாத தொடக்கத்தில் முதற்கட்டமாக 5 மில்லியன் தடுப்பூசி டோஸ் வழங்கப்பட்டுள்ளது. மேலும் இரண்டாவது கட்டமாக 5 மில்லியன் தடுப்பூசி டோஸ் வழங்குவது குறித்து இந்திய அரசு ஆலோசித்து வருகிறது.

மீண்டும் இந்தியாவில் கொரோனா பரவலை தடுக்க தடுப்பூசி திட்டத்தை விரிவுபடுத்தவும், அதிகமான தடுப்பூசிகளை சேமித்து வைக்கவும், மீண்டும் ஊரடங்கு செயல்படுத்துவது குறித்தும் ஆலோசனை செய்து வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here