-இஸ்ரேல் பாராளுமன்ற தேர்தல் களம் –
எனவே எதிர்க்கட்சியுடன் சேர்ந்து ஒற்றுமை அரசாங்கத்தை நிறுவ பெஞ்சமின் நேதன்யாகு முடிவு செய்தார். இதற்காக புளு அண்ட் ஒயிட் கட்சியின் தலைவரும், முன்னாள் ராணுவ தளபதியுமான பென்னிட் கான்ட்சுடன் பெஞ்சமின் நேதன்யாகு பேச்சுவார்த்தை நடத்தினர்.
எனினும் நீண்ட இழுபறிக்குப் பிறகு லிக்குட், புளு அண்ட் ஒயிட் கட்சியில் கூட்டணியில் ஒற்றுமை அரசு நிறுவப்பட்டது. முதல் 18 மாதங்களுக்கு பெஞ்சமின் நேதன்யாகுவும் அடுத்த 18 மாதங்களுக்கு பென்னி கான்ட்சும் பிரதமராக இருக்க ஒப்பந்தம் போடப்பட்டது. அதன்படி பெஞ்சமின் நேதன்யாகு பிரதமராக பதவி ஏற்றார்.
இந்த சூழலில் கூட்டணியில் ஏற்பட்ட குழப்பம் காரணமாக பாராளுமன்றத்தின் பட்ஜெட் தாக்கல் செய்வது தாமதமானது. இதனால் பெஞ்சமின் நேதன்யாகு தலைமையிலான அரசு கவிழ்ந்தது.
நாட்டில் கொரோனா வைரஸ் தடுப்பூசி திட்டத்தை வெற்றிகரமாக தொடங்கி வைத்தது மற்றும் அரபு நாடுகளுடனான தூதரக அணுகுமுறையில் மாற்றம் கொண்டு வந்தது போன்ற காரணங்களால் மக்கள் தனக்கு வெற்றி வாய்ப்பை வழங்குவார்கள் என பெஞ்சமின் நேதன்யாகு உறுதியாக நம்புகிறார்.
கொரோனா வைரஸ் குறித்த அச்சம் இதற்கு முக்கிய காரணமாக அமையும் என அவர்கள் நம்புகின்றனர். எனினும் கொரோனா வைரஸ் காரணமாக அந்நாட்டு தேர்தல் ஆணையம் பல சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது.
நோய்வாய்ப்பட்ட,தனிமைப்படுத்தப்பட்டு உள்ள நபர்கள் வாக்களிப்பதற்காக தனி வாக்குச்சாவடிகள் மற்றும் நகரும் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதுதவிர முக கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைப்பிடித்தல், கிருமிநாசினி கொண்டு சுத்தம் போன்ற அனைத்து விதமான கொரோனா கட்டுப்பாடுகளும் முறையாக கடைபிடிக்கப்பட்டு வாக்குப்பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.