கிரேக்கம் நாடு பால்க்கன் மூவலந்தீவுக்குத் தென்புறத்தில் அமைந்துள்ளது. இந்நாட்டுக்கு வடக்கே அல்பேனியாவும், மாசிடோனியாவும், பல்கேரியாவும், கிழக்கே துருக்கியும் அமைந்துள்ளது.
மைசீனியர்கள் உள்ளிட்ட இந்தோ- யூரோ மக்கள் கி.மு.2000- ஆம் ஆண்டளவில் கிரேக்கத்தில் குடியேறினர். கி.மு.1200- ஆ ஆண்டளவில் டோரியர் என்னும் மற்றோர் இந்தோ- யூரோ குழுவினர் கிரேக்கத்தைக் கைப்பற்றியதை அடுத்து, இங்கு இருண்ட யுகம் ஆரம்பமாகியது.
இந்த இருண்ட யுகத்தின் இறுதிக் கட்டமாகிய கி.மு.750 ஆம் ஆண்டின் பின்னர் கலை, இலக்கியம், வர்த்தகம், அரசியல், தத்துவம் என பல்வேறு துறைகளில் வியத்தகு வளர்ச்சி அடைந்து வளம் பொருந்திய நாடாக மாறியது.
கி.மு.431 முதல் கி.மு.403 வரை நடைபெற்ற பாபிலோனேசியன் யுத்தத்தால் நாடு பெரிதும் பலவீனமடைய, 2- ஆம் பிலிப், அவரது மகன் ஆகியோர் மசிடோனியாவின் மகா ஆலெக்சாண்டரினால் கைதுசெய்யப்பட்டதையடுத்து, கிரேக்கம் என்றும் கிரேக்கர்கள் என்ற அடையாளமும் நிலைநாட்டப்பட்டது.
கி.மு.2- ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் பரிசுத்த உரோமானியப் பேரரசால் கைப்பற்றப்பட்டது. பின்னர் 1460- இல் ஒட்டோமன் பேரரசின் கீழ் வந்தது. 1821- இல் கிரேக்க சுதந்திரத்திற்கான யுத்தம் ஆரம்பமானது. 1821 மார்ச் மாதம் 17- ஆம் திகதியில் சுதந்திரப்பிரகடனம் மேற்கொள்ளப்பட்டது.
பின்னர் 1827- இல் ஒட்டோமன் பேரரசிடம் இருந்து சுதந்திரத்தைப் பெற்றுக்கொண்டது. இரண்டாம் உலக மகாயுத்தத்தின் போது ஜேர்மனியின் பிடியில் சிக்கியது. 1967- இல் மேற்கொள்ளப்பட்ட இராணுவப் புரட்சியில் மன்னர் கொன்ஸ்தாந்தின் நாட்டைவிட்டு ஓடினார். 1974- இல் மன்னராட்சி முடிவுக்கு வந்து, 1995 இதற்குப் பின்னர் குடியரசானது.