வெளியே செல்வதை தவிர்க்கவும்..!

-5 நாட்களுக்கு அனல்காற்று  எச்சரிக்கை..,

தமிழகத்தில் 5 நாட்களுக்கு அனல் காற்று வீசும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இன்று முதல் 5 நாட்களுக்கு தமிழகத்தில் அனல் காற்று வீசும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால், தமிழகத்தில் 20 மாவட்டங்களில் வெப்பநிலை இயல்பைவிட 3 – 5 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும் எனவும் மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்களில் வெப்பநிலை இயல்பைவிட 2 – 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மேலும், தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களுக்கு அனல்காற்று எச்சரிக்கை விடுக்கபப்ட்டுள்ளது. இதன் காரணமாக பொதுமக்கள், விவசாயிகள், தேர்தல் வேட்பாளர்கள், வாக்காளர்கள் , போக்குவரத்து காவலர்கள் பகல் 12 மணி முதல் 4 மணி வரை திறந்து வெளியில் வேலை, ஊர்வலம் செல்வதை தவிர்க்குமாறு வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here