புற்றுநோய் முதல் நீரிழிவு நோய் வரை

அனைத்து பிரச்சினைக்கும் வெங்காயம் !

வெங்காயத் தோலில் நமக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கிறது, எப்படி உணவில் எடுத்து கொள்ளலாம் ?

நாம் அன்றாடம் சமையலுக்கு பயன்படுத்தும் ஒரு முக்கிய உணவுப்பொருளாக வெங்காயம் இருக்கின்றது. இந்த வெங்காயத்தில் புரதச்சத்துக்கள், தாது உப்புக்கள், விட்டமின்கள் என பல சத்துக்கள் அடங்கியுள்ளன. இதனால் வெங்காயத்தின் மூலம் நம் உடலுக்கு அதிக ஊட்டச்சத்துக்கள் கிடைக்கிறது.

 

மேலும் இந்த வெங்காயத்தை பல்வேறு நாடுகளிலும் மருந்துப் பொருளாகப் பயன்படுத்துகிறார்கள். இதை போலவே வெங்காய தோல்களிலும் பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.

 

இந்த வெங்காயத் தோல்கள் புற்றுநோய் முதல் நீரிழிவு வரை உள்ள நோய்களுக்கு தீர்வாக இருக்கிறது. இதனால் வெங்காய தோலினால் என்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை பார்க்கலாம்.

 

1.வெங்காயத்தில் உள்ள க்யூயர்சிடின் தமனிகளில் அடைப்பு ஏற்படுவதை தடுக்கும். உயர் ரத்த அழுத்தத்தை குறைக்கும். இதில் மிக சக்தி வாய்ந்த மயக்கமருந்து பண்புகள் இருப்பதால் தூக்கமின்மையைச் சரி செய்யும்.

 

2.வெங்காயத் தோலில் ஆற்றல்மிக்க ஆன்டிபாக்டீரியல், ஆன்டி-ஆக்ஸிடன்ட் போன்ற புற்றுநோயை எதிர்க்கும் பண்புகள் ஏராளமான அளவில் உள்ளன.

 

3.இந்தத் தோலில் ப்ளெவோனாய்டு, ஆன்டி-ஆக்ஸிடண்ட் தன்மையுள்ள க்யூயர்சிடின் ஆகியவை இருப்பதால் புற்றுநோய்க்குக் காரணமான செல்களை முற்றிலும் அழித்துவிடுகின்றன.

 

4.வெங்காயத் தோலில் இருக்கும் கரையாத நார்ச்சத்துக்கள் குடல் சம்பந்தமான பிரச்சினைகள் வராமல் தடுக்கின்றன.

 

5.வெங்காயத்தில் உள்ள கரையாத நார்ச்சத்து பெருங்குடலில் தேங்கியிருக்கும் டாக்ஸின்களை வெளியேற்றும், PH அளவை சரியாக வைக்கும்.

 

6.டைப் 2 நீரிழிவு, இதயநோய்கள், உடல் பருமன், குடல் புற்றுநோய் போன்ற நோய்களைக் கூட இது குறைக்கும்.

வெங்காய தோலினை எப்படி உணவாக எடுத்து கொள்ளவது:

  • சூப் செய்தோ அல்லது தேநீர் போன்றோ வெங்காயத் தோலினை எடுத்துக்கொள்ளலாம்.
  • முதலில் ஒரு பாத்திரத்தில் வெங்காயத்தின் தோல்களை போட வேண்டும். பின்னர் அதில் கொதிக்கும் நீரை ஊற்றி மூடி வைத்து 15 நிமிடம் கழித்த பின் வடிகட்ட வேண்டும். இதனுடன் சிறிது தேன் கலந்து இரவில் படுக்கும் முன் ஒரு கப் குடிக்க வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here