பெட்டாலிங் ஜெயா: மாமன்னர் அல்-சுல்தான் அப்துல்லா ரியாதுதீன் அல்-முஸ்தபா பில்லா ஷா “Tamat Darurat“ (அவசரகால நிலையை முடிவுக்குக் கொண்டுவருதல்) குழுவினரை சந்திப்பதற்கு அனுமதி வழங்கியுள்ளார் என்று காலித் சமத் (படம்) கூறுகிறார்.
ஷா ஆலம் நாடாளுமன்ற உறுப்பினரான அவர் இதற்கான தேதி இன்னும் நிர்ணயிக்கப்படவில்லை என்றாலும், விரைவில் அது தெரியவரும் என்ற நம்பிக்கை உள்ளது என்று கூறினார்.
அவசரகாலத்தின் மோசமான விளைவுகள் நாளுக்கு நாள் அதிகமாக வெளிப்படுகின்றன என்று அவர் வியாழக்கிழமை (ஏப்ரல் 22) ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
இஸ்தானா நெகராவின் கடிதத்தில் மாமன்னரின் தனிப்பட்ட செயலாளர் கர்னல் டத்தோ நாஜிம் முகமட் ஆலிம் கையெழுத்திட்டார் என்று அவர் கூறினார். இந்த விஷயத்தில் மன்னர் அக்கறை காட்டியதற்கு காலித் நன்றி தெரிவித்தார்.
செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 20), எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் தலைமையிலான குழு ஒன்று இஸ்தானா நெகாராவில் கூடி, மாமன்னரிடம் அவசரகால நிலையை முடிவுக்குக் கொண்டு வந்து நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்ட அனுமதிக்குமாறு கோரியது.
கோவிட் -19 தொற்றுநோயைக் கட்டுப்படுத்துவதற்கான ஒரு செயல்திறன்மிக்க நடவடிக்கையாக ஆகஸ்ட் 1 ஆம் தேதி வரை நாடு முழுவதும் அவசரகால நிலையை மாமன்னர் அறிவித்தார்.
கோவிட் -19 தொற்றின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தவும் திறம்படக் குறைக்கவும் முடியுமானால் ஆகஸ்ட் 1 அல்லது அதற்கு முன்னர் வரை அவசரநிலை அமலில் இருக்க வேண்டும் என்று அவர் உத்தரவிட்டிருந்தார்.