உருமாறிய கொரோனாவுக்கு எதிராகவும் கோவேக்சின் திறன்மிக்கது

.. ஆய்வில் நம்பிக்கைத்  தகவல் !!

உலகம் முழுவதும் கொரோனாவின் 2ஆவது அலை மிகத்தீவிரமாக பரவி வருகிறது. பல நாடுகள் கொரோனாவை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றன. அதேநேரத்தில் உலகம் முழுவதும் கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி போடும் பணி துரிதப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், பிரேசில், பிரிட்டன், இந்தியா ஆகிய நாடுகளில் காணப்படும் உருமாறிய கொரோனா வைரசுக்கு எதிராக கோவாக்சின் தடுப்பூசி சிறப்பாக செயல்படுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

இந்தியாவில் தற்போது கோவாக்சின், கோவிஷீல்டு ஆகிய இரண்டு தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் , பாரத் பயோடெக் நிறுவனம் இணைந்து கொரோனா தடுப்பூசியை தயாரித்து வருகின்றது.

பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசி வேகமாக பரவி வரும் இங்கிலாந்தின் இரட்டை மரபணு மாறிய கொரோனா வைரசுக்கு எதிராக நல்ல பலன் தருவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்திருந்தனர்.

இதேபோல் கோவிஷீல்டு தடுப்பூசியூம் இரட்டை மரபணு மாற்றம் அடைந்த கொரோனா வைரஸ்களுக்கு எதிராக செயல்படுவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர். இந்நிலையில் பிரேசிலின் உருமாறிய கொரோனா வைரசுக்கு எதிராக கோவாக்சின் சிறப்பாக செயல்படுவதாக ஆய்வில் நிரூபிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here