பாரிசான் நேஷனலின் புதிய பொதுச் செயலாளராக ஜம்ரி அப்துல் காதீர் நியமனம்

பெட்டாலிங் ஜெயா: முன்னாள் பேராக் மந்திரி பெசார் ஜம்ரி அப்துல் காதீர் பாரிசான் நேஷனலின் (தேசிய முன்னணி) புதிய பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த ஆண்டு இந்த பதவியை வகிக்கும் மூன்றாவது நபராக ஆனார்.

அன்னுவார் மூசாவிடம் இருந்து ஜனவரி மாதம் பொறுப்பேற்ற அஹ்மட் மஸ்லானுக்கு பதிலாக ஜம்ரி இந்த பதவியை ஏற்றார்  என்று அம்னோ துணைத் தலைவர் காலீட் நோர்டின் உறுதிப்படுத்தியுள்ளார். மற்றொரு ஆதாரத்தின்படி, ஆன்லைனில் நடைபெற்ற கூட்டணியின் உச்ச மன்ற கூட்டத்தில் இந்த நியமனம் அறிவிக்கப்பட்டது.

ஜனவரி 5 ஆம் தேதி, பெர்சத்துவுடன் மிகவும் ஆதரவானவர் என்று குற்றம் சாட்டப்பட்ட அன்னுவார் – பிஎன் பொதுச் செயலாளர் மற்றும் முஃபாக்கட் தேசிய பொதுச் செயலாளர் ஆகிய இரு பதவிகளில் இருந்து நீக்கப்பட்டார். அவருக்கு பதிலாக அம்னோவின் பொதுச்செயலாளரான அஹ்மட் நியமிக்கப்பட்டார்.

ஜம்ரி முன்னாள் பேராக் அம்னோ தலைவராக இருந்திருக்கிறார். மேலும் 2009 முதல் 2018 வரை மந்திரி பெசாராக பணியாற்றினார். கடந்த ஆண்டு ஆகஸ்டில் அவர் மலேசியா விமான நிலைய ஹோல்டிங்ஸ் சென்.பெர்ஹாட் தலைவராக நியமிக்கப்பட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here