பெட்டாலிங் ஜெயா: கடந்த 24 மணி நேரத்தில் 5,293 கோவிட் -19 தொற்று பதிவாகி இருப்பதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஒரு டுவிட்டரில், சுகாதார தலைமை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா கூறுகையில், மொத்த தொற்றுநோய்களின் எண்ணிக்கை இப்போது 696,408 ஆக உள்ளது.
சிலாங்கூரில் 1,680 என அதிகத் தொற்று பதிவாகியுள்ளன. இதைத் தொடர்ந்து நெகிரி செம்பிலான் (693), சரவாக் (661), ஜோகூர் (627), கோலாலம்பூர் (379), பேராக் (205), மலாக்கா (183), கெடா (170), கிளந்தா (167), சபா (163) , லாபுவான் (156), பினாங்கு (114), பஹாங் (77), தெரெங்கானு (12), புத்ராஜெயா (4), பெர்லிஸ் (2).