ஹாங் காங் ( ஜூன் 24):
ஒரு காட்டுப்பன்றி குட்டி அதன் வாழ்விடத்திலிருந்து விலகி, ஹாங்காங்கில் பொது போக்குவரத்து ரயிலில் ஏறியபோது, ரயிலில் இருந்த பயணிகள் பயத்துடன் காணப்பட்ட ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானது.
இருப்பினும், நிலைமை அமைதியாக கையாளப்பட்டது என்றும் இவ்வாறு எதிர்பாராது நகருக்குள் வரும் விலங்குகளை பார்ப்பது உற்சாகமாக இருப்பதாகவும் தென் சீன மார்னிங் போஸ்ட் (SCMP) தெரிவித்துள்ளது.
இந்த சம்பவம் வெள்ளிக்கிழமை மாலை 3.55 மணியளவில் நடந்தது, வழி தெரியாத ஒரு பன்றிக்குட்டி ஹாங்காங்கில் உள்ள குவாரி பே நிலையத்திற்குள் நுழைந்து ,ரயில் வண்டியில் ஏறியதாக நம்பப்படுகிறது.
27-வினாடி வீடியோவில், சில ஊழியர்கள் கேன்வாஸ் மற்றும் வலைகளைப் பயன்படுத்தி வண்டியின் உள்ளேயும் வெளியேயும் விலங்குகளைப் பிடிக்க முயற்சிப்பதைக் காட்டியது.
இருப்பினும், போர்ட் விக்டோரியா என்னும் இடத்துக்கு செல்லும் இரண்டாவது ரயிலில் பன்றிக்குட்டி ஓடும் வரை மீட்புப் பணிகள் தோல்வியடைந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
வனவிலங்குத் துறை அதிகாரி சூங் குவான் ஓ இது பற்றிக் கூறிய போது, ரயிலை ஏதாவது ஒரு ரயில் நிலையத்தில் நிறுத்தி இருக்க வேண்டும், அதன் பின்னரே வன விலங்குத்துறை உறுப்பினர்கள் விலங்குகளை பிடிக்க அனுமதிக்க வேண்டும் என்றும் கூறினார்.
இந்த சம்பவத்தில், எந்த காயங்களும் ஏற்படவில்லை என்றும் விலங்குகளை அதன் சொந்த வாழ்விடத்திற்கு திருப்பி அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.