விலகியவருக்கு மீண்டும் வரவேற்பு!
அரசியலில் நிரந்தர எதிரியும் அல்லர் , நிரந்திர நண்பரும் அல்லர். திறமை நேர்மை உணரப்படும்போது அரசியல் செல்வாக்கு தானே வந்து சேரும் என்பதற்கு பிரிட்டன் சுகாதாரத்துறை ஓர் எடுத்துக்காட்டு.
பிரிட்டன் சுகாதாரத்துறை மந்திரி மாட் ஹான்காக், கொரோனா சமூக இடைவெளி விதிமுறைகளை மீறி தனது அலுவலகத்தில் வைத்து பெண் உதவியாளரை கட்டியணைத்து முத்தம் கொடுத்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
மாட் ஹான்காக் தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்ததோடு, பிரதமர் போரிஸ் ஜான்சனிடம் மன்னிப்பும் கோரினார். பின்னர் எதிர்க்கட்சிகளின் வலியுறுத்தல் காரணமாக மந்திரி பதவியை ராஜினாமா செய்தார்.
அவரது ராஜினாமாவை பிரதமர் போரிஸ் ஜான்சன் ஏற்றுக்கொண்டார். அத்துடன், முன்னாள் நிதி மந்திரி சஜித் ஜாவித்தை சுகாதாரத்துறை மந்திரியாக நியமித்துள்ளார்.
ஜாவித் கடந்த ஆண்டு நிதி மந்திரியாக இருந்தபோது, அவரது அரசியல் ஆலோசகர்களை நீக்கும்படி பிரதமர் போரிஸ் ஜான்சன் வலியுறுத்தினார்.
இதற்கு ஜாவித் மறுப்பு தெரிவித்தார். இந்த அதிகார மோதல் காரணமாக ஜாவித் தனது பதவியை ராஜினாமா செய்தார். இப்போது மீண்டும் மந்திரிசபையில் சேர்க்கப்பட்டுள்ளார்.