174 மாவட்டங்களில் கண்டுபிடிப்பு
கவலைக்குரிய மாறுபாடுகள் இந்தியாவின் 35 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு உட்பட்ட 174 மாவட்டங்களில் கண்டறியப்பட்டு உள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது.
சீனாவில் முதன் முதலில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ், பல்வேறு வகைகளில் மாறுபாடு அடைந்து வருகிறது. இவற்றை கவலைக்குரிய மாறுபாடுகளாக உலக சுகாதார அமைப்பு வரையறுத்து உள்ளது.
இந்த கவலைக்குரிய மாறுபாடுகள் இந்தியாவின் 35 மாநிலங்கள் , யூனியன் பிரதேசங்களுக்கு உட்பட்ட 174 மாவட்டங்களில் கண்டறியப்பட்டு உள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது. அந்தவகையில் ஆல்பா, பீட்டா, காமா, டெல்டா வைரஸ்களும், டெல்டாவில் இருந்து மேலும் திரிபடைந்த டெல்டா பிளஸ் தொற்றும் பல மாநிலங்களில் உள்ளதாகவும் அமைச்சகம் கூறியுள்ளது.
இதில் மராட்டியம், டெல்லி, பஞ்சாப், தெலுங்கானா, மேற்கு வங்காளம், குஜராத் ஆகிய மாநிலங்களில் அதிக எண்ணிக்கையில் இந்த தொற்றுகள் இருப்பது கண்டறியப்பட்டு உள்ளதாகவும் மத்திய அரசின் அறிக்கையில் மேலும் கூறப்பட்டு உள்ளது.