இலங்கையில் சீன துறைமுகம்- பறிபோய்விடும் சுதந்திரம்

 அடுத்த ஆண்டில் தயாராகிவிடுமாமே!

 

கொழும்பு:
நம் அண்டை நாடான இலங்கையின் தென்பகுதியில் உள்ள அம்பன்தோட்டாவில் சீனா அமைத்துவரும் துறைமுகம் அடுத்த ஆண்டில் பயன்பாட்டுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியப் பெருங்கடல்பகுதியில் நடக்கும் வர்த்தகத்தில் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது இலங்கையில் உள்ள அம்பன்தோட்டா.
இந்தக்கடல் பகுதியில் நடக்கும் பெட்ரோலியப் பொருள்கள் வர்த்தகத்தில் 50 சதவீதம் இந்த துறைமுகம் வழியாகவே செய்யப்படுகிறது.
இந்நிலையில் இந்த துறைமுகத்தை பல்நோக்கு துறைமுகமாக மாற்றுவதற்கு சீனா முன்வந்தது. இதற்காக 8350 கோடி ரூபாய் செலவில் அதை மேம்படுத்தி வருகிறது. சீனாவிடம் வாங்கிய கடனை அடைக்க முடியாமல் இந்த துறைமுகத்தை 99 ஆண்டு குத்தகைக்கு இலங்கை கொடுத்து உள்ளது .
பாதுகாப்பு ரீதியில் பிரச்சினை ஏற்படும் என்பதால் இந்த திட்டத்துக்கு இந்தியா தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்துவருகிறது.
இந்நிலையில் ‘அடுத்த ஆண்டில் இந்த துறைமுகம் பயன்பாட்டுக்கு வரும்’ என சீனா இலங்கை கூட்டு நிறுவனம் அறிவித்து உள்ளது.
கமெண்ட்: கடன் பட்டார் போல் கலங்கினான் இலங்கை வேந்தன் என்பது ராமாயணம் . அது போல் இனி ஆண்டவனால் கூட இலங்கையைக் காப்பாற்ற முடியாது!
இது , இந்தியாவைக் குறிவைக்கும் சதி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here