சிறப்பாகப் பணிபுரிந்தால் சிறந்த பரிசு

ஊழியர்களுக்கு மெர்சிடிஸ் பென்ஸ் கார் 

ஹெச் சி எல் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களை ஊக்குவிக்கும் வகையில் ஒரு முக்கிய அறிவிப்பை இந்நிறுவனம் வெளியிட்டுள்ளது.

ஹெச் சி எல் நிறுபனத்தின் உரிமையாளர் ஷிவ் நாடார் இந்தியாவில் மிகப்பெரிய கோடீஸ்வர்களில் ஒருவர்.

இந்நிலையில் அவர் சமீபத்தில் தன்னுடைய நிர்வாக இயக்குனர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு ஆலோசகராக மட்டும் தொடர உள்ளதாக தகவல்கள் வெளியானது . ஆலோசகராக அவர் 5 ஆண்டுகள் தொடர்வார் எனக் கூறப்பட்டது.

இந்நிலையில், இன்று ஹெச்.சி.எல் நிறுவனம் முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, இந்நிறுவனத்தில் சிறப்பாகப் பணிபுரிந்தால் பென்ஸ் கார் பரிசாக வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here