அவசர கால பிரகடனம் குறித்த இஸ்தானா நெகாராவின் அறிக்கை; பிரதமர் இல்லத்தில் குவியும் ஊடகவிலாயளர்கள்

கோலாலம்பூர்: அவசரகால கட்டளைகளை ரத்து செய்வது தொடர்பாக இஸ்தானா நெகாரா வெளியிட்டுள்ள அறிக்கையைத் தொடர்ந்து மதியம் 1 மணி முதல் இங்குள்ள புக்கிட் டாமான்சாராவில் உள்ள பிரதமர் முஹிடின் யாசினின் இல்லத்திற்கு ஊடக உறுப்பினர்கள் திரண்டு வருகின்றனர்.

அமைச்சரவை உறுப்பினர்கள் மற்றும் அட்டர்னி ஜெனரல் இட்ரஸ் ஹருன் ஆகியோர் செல்வதாக நம்பப்படும் பல வாகனங்கள் மதியம் 1.30 மணியளவில் குடியிருப்புக்கு பிரதான வாயிலுக்குள் நுழைந்தன.

இஸ்தானா நெகாராவின் அறிக்கையில், மாமன்னர் சுல்தான் அப்துல்லா சுல்தான் அஹ்மத் ஷா கடந்த திங்கட்கிழமை பாராளுமன்றத்தில் வெளியிட்ட அறிக்கையில் மிகுந்த ஏமாற்றத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு விவாதிக்கப்படவுள்ள அனைத்து கட்டளைகளையும் ரத்து செய்ய முன்மொழியப்பட்டதற்காக சட்டத்துறை அமைச்சர் தக்கியுதீன் ஹசான் மற்றும் அட்டர்னி ஜெனரல் இட்ரஸ் ஹருன் ஆகியோருக்கு அவரது மாட்சிமையின் ஆணையை நிறைவேற்றப்படவில்லை என்பதில் மன்னர் மிகவும் ஏமாற்றமடைந்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here