இருதவணை தடுப்பூசி போட்டவர்களுக்கு மட்டுமே அனுமதி
கோவையில் இன்று முதல் பால், மருந்தகங்கள், தனியாக செயல்படும் காய்கறி கடைகளைத் தவிர மற்ற அனைத்து கடைகளும் காலை 10 மணி முதல் 5 மணி வரை மட்டுமேசெயல் பட அனுமதிக்கப்பட்டுள்ளது.
கடைகளுக்கு வருபவர்களை கடை உரிமையாளர்கள் முக கவசம் , சமூக இடைவெளியை கடைபிடிக்க அறிவுறுத்தினர்.
மாவட்டத்தில் உள்ள மார்க்கெட்டுகளில் சில்லரை விற்பனை நிறுத்தப்பட்டு, மொத்த விற்பனை மட்டுமே நடைபெற்றது. விவசாயிகள் கொண்டு வந்த பொருட்களை வியாபாரிகள் வாகனங்கள் மூலம் எடுத்து சென்றனர். மார்க்கெட்டுகளிலும் அடிக்கடி கிருமி நாசினி மருந்து தெளிக்கப்பட்டது. அங்கு வந்த அனைவரும் முக கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைபிடித்தனர்.
கோவையில் திடீரென தொற்று அதிகரித்ததாலும், அண்டை மாநிலமான கேரளாவில் தொற்று பாதிப்பு அதிகமாக உள்ளதாலும் இன்று முதல் கேரளா, கர்நாடகா உள்பட வெளி மாநிலங்களில் இருந்து வருபவர்கள் கட்டாயம் கொரோனா பரிசோதனை செய்திருக்க வேண்டும். அல்லது 2 தவணை தடுப்பூசி செலுத்தியிருந்தால் மட்டுமே கோவைக்குள் அனுமதிக்கப்படுகிறார்கள்.