பாலாகோங் ஶ்ரீ தீமா குடியிருப்பு பகுதியில் ஆயுதமேந்தி சண்டையிட்ட கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்

கோலாலம்பூர்: பாலாகோங் ஸ்ரீ திமா  குடியிருப்பு பகுதியில் நடந்ததாகக் கருதப்படும் ஒரு சம்பவத்தில் ஆயுதங்களைப் பயன்படுத்தி சண்டையில் ஈடுபட்ட ஒரு குழுவினரின் வைரல் வீடியோ தொடர்பாக பல தனிநபர்களை இங்கே போலீசார் தேடி வருகின்றனர்.

காஜாங்  மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி முகமது ஜைத் ஹாசன், ஒரு போலீஸ் அதிகாரி ஒரு நிமிடம் 32 வினாடிகள் நீடிக்கும் வீடியோ கிளிப்பை சமூக ஊடகங்களில் பார்த்ததாகவும், இன்று காலை 9 மணிக்கு இது குறித்து புகார்  செய்ததாகவும் கூறினார்.

வீடியோவில், ஒரு குழுவினர் இரும்பு கம்பிகள் அல்லது கூர்மையான ஆயுதங்கள் என்று நம்பப்படும் ஆயுதங்களைப் பயன்படுத்தி சண்டையிட்டனர். சம்பவத்தின் பின்னணி இன்னும் விசாரணையில் உள்ளது மற்றும் அனைத்து சந்தேக நபர்களையும் போலீசார் தேடி வருகின்றனர்.

குற்றவியல் சட்டம் பிரிவு 148 மற்றும் 269 ன் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.  சம்பவம் குறித்து தகவல் தெரிந்தவர்கள் அருகில் உள்ள காவல் நிலையம் அல்லது விசாரணை அதிகாரி இன்ஸ்பெக்டர் நோர்ஹாஃபிசா போர்ஹானை 03-8911 4222 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here