அமெரிக்காவில் 3ஆவது டோஸ் தடுப்பூசி போட்டு கொள்ள அனுமதி

அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில் மூன்றாவது டோஸ் தடுப்பூசி போட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்துள்ள நிலையில் பல கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் உலகம் முழுவதும் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் பெரும்பாலும் மக்களுக்கு இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்திவிட்ட நிலையில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது, இந்நிலையில் எதிர்ப்புசக்தி குறைவாக உள்ளவர்களுக்கு மூன்றாவது டோஸ் தடுப்பூசியும் செலுத்த அமெரிக்கா அனுமதி அளித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here