இன்று 20,670 பேருக்கு கோவிட் தொற்று

கடந்த 24 மணி நேரத்தில் 20,670 கோவிட் -19 தொற்று பதிவாகி இருப்பதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது நேற்றைய 21,468 நோய்த்தொற்றுகளிலிருந்து ஒரு சிறிய வீழ்ச்சியைக் குறிக்கிறது. சுகாதார தலைமை இயக்குநர்  டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா ஒரு டுவீட்டில், மொத்த தொற்றுநோய்களின் எண்ணிக்கை இப்போது 1,384,353 ஆக உள்ளது.

சிலாங்கூரில் 6,606 வழக்குகள் பதிவாகியுள்ளன. இதைத் தொடர்ந்து கோலாலம்பூரில் 2,028 நோய்த்தொற்றுகள், கெடா (1,796), சபா (1,752), ஜோகூர் (1,425), கிளந்தான் (1,370), பினாங்கு (1,251), பேராக் (1,003), பகாங் (794), நெகிரி செம்பிலான் (727) , சரவாக் (725), தெரெங்கானு (560), மலாக்கா (521), பெர்லிஸ் (61) மற்றும் புத்ராஜெயா (51).

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here