பெட்டாலிங் ஜெயா: வாகனம் தீப்பிடித்ததால், வாகனத்தினுள் மயக்க நிலையில் இருந்த தந்தை மகனால் வெளியே மீட்கப்பட்டார். ஆனால் மாரடைப்பு வந்து அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக நம்பப்படும் ஒரு துயர சம்பவம் மலாக்காவில் நடந்துள்ளது.
நேற்று (ஆகஸ்டு 25) காலை நடந்த சம்பவத்தில், மின்சார சபை (TNB) ஊழியரான, முகமட் லேலா ஓத்மான் (51) என்பவர் , மாரடைப்பு ஏற்பட்டு இறந்ததாக நம்பப்படுகிறது.
இச்சம்பவம் பற்றி மலாக்காவின் தெங்கா மாவட்ட போலீஸ் தலைமை அதிகாரி அஃப்சனிசர் அக்மட் கூறுயபோது, தனது தந்தையின் புரோட்டான் எக்ஸோரா வகை வாகனம் பின்னால் எரிந்து கொண்டிருப்பதைக் கண்ட, அவரது மகன் அவரை வாகனத்திலிருந்து வெளியே எடுத்ததாக கூறினார்.
காலை 8 மணியளவில், வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தனது வாகனத்தின் இயந்திரத்தை இயக்குவதற்கு முன் பாதிக்கப்பட்டவர் தனக்கு நெஞ்சுவலி இருப்பதாக புகார் கூறினார் என்றும் தெரிவித்தார்.
“புகை நிரம்பியிருந்த வாகனத்தைப் பார்த்த அவரது மகன், வேகமாக செயல்பட்டு அவனது தந்தையை வெளியேற்றினார். அப்போது பாதிக்கப்பட்டவர் மயக்கமடைந்திருந்தார்.
“காலை 8.50 மணிக்கு வந்த மருத்துவக் குழு பாதிக்கப்பட்டவர் இறந்துவிட்டதை உறுதிப்படுத்தியது,” என்று அவர் கூறினார்.
பரிசோதனையில் பாதிக்கப்பட்டவரின் உடலில் தீக்காயங்கள் அல்லது தீக்காயங்கள் இருப்பதற்கான அறிகுறிகள் எதுவும் இல்லை என்றும் மேலுக் குற்றவியல் கூறுகளின் எந்த தடயத்தையும் போலீசாருக்கும் கிடைக்கவில்லை என்றும் அவர் கூறினார்.
மேலும் பாதிக்கப்பட்டவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக மலாக்கா மருத்துவமனையின் தடயவியல் துறைக்கு அனுப்பப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.