போதைப்பொருளும் மதுவும் சேர்ந்த விருந்து – 2 பெண்கள் உள்ளிட்ட 17 பேருக்கு 51 ஆயிரம் வெள்ளி சம்மன்

சுங்கை மலாக்காவில் உள்ள ஒரு அடுக்கு மாடி குடியிருப்பில்  போதைப் பொருள்  மற்றும் மது விருந்தை ஏற்பாடு செய்ததற்காக இரண்டு பெண்கள் உட்பட பதினேழு நபர்களுக்கு 51,000 வெள்ளி மதிப்புள்ள கூட்டு சம்மன் வழங்கப்பட்டது. வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 10) இரவு 11 மணியளவில் ரகசிய தகவல் கிடைத்தவுடன் அவரது குழுவினர் சோதனை நடத்தியதாக மலாக்கா சிஐடி தலைவர் உதவி ஆணையர் முகமது சுக்ரி கமான் கூறினார்.

கைது செய்யப்பட்டவர்கள் 17 முதல் 35 வயதுக்குட்பட்டவர்கள் என்று அவர் கூறினார். விருந்தை ஏற்பாடு செய்வதற்காக அவர்கள் RM450 விலையில் அடுக்கு மாடியில் இரண்டு யூனிட்களை வாடகைக்கு எடுத்தனர்  என்று அவர் சனிக்கிழமை (செப்டம்பர் 11) கூறினார்.

தனிநபர்களில் ஒருவர் சோதனையின் போதைப் பொருள் உட்கொன்டது உறுதி செய்யப்பட்டது என்று அவர் கூறினார். ஏசிபி முகமட் சுக்ரி கூறுகையில், தனிநபர்களுக்கு நோய் தடுப்பு நடவடிக்கை மற்றும் கட்டுப்பாட்டு சட்டம் 2021 இன் கீழ் தலா 3 ஆயிரம் கூட்டு சம்மன்கள் வழங்கப்பட்டன. ஆபத்தான மருந்துகள் சட்டம் 1952 ன் பிரிவு 15 (1) (a) இன் கீழ் விசாரணையும் மேற்கொள்ளப்படுகிறது என்று அவர் மேலும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here