கடந்த 24 மணி நேரத்தில் 14,954 கோவிட் -19 தொற்றுகள் பதிவுகள் என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஒரு டுவிட்டர் பதிவில், சுகாதார இயக்குநர் ஜெனரல் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா கூறுகையில், மொத்த தொற்றுநோய்களின் எண்ணிக்கை இப்போது 2,097,830 ஆக உள்ளது.
சரவாக் 2,707 தொற்றினை பதிவு செய்துள்ளது. இதைத் தொடர்ந்து சிலாங்கூர் (2,028), ஜோகூர் (1,948), கெளந்தன் (1,420), சபா (1,356), பினாங்கு (1,259), பேராக் (1,222), கெடா (809), பஹாங் (705), தெரெங்கானு (671), கோலாலம்பூர் (383), மலாக்கா (207), நெகிரி செம்பிலான் (144), பெர்லிஸ் (76), புத்ராஜெயா (19) மற்றும் லாபுவான் (0).