தாய்லாந்து நாட்டில் டியான்மு (Dianmu) சூறாவளி தாக்கியதில் பல வீடுகள் சேதமடைந்துள்ளன. அதிகளவு பெய்த மழையால் வீடுகள் மூழ்கிய நிலையில் மக்கள் மேல் கூரைகளில் தஞ்சமடைந்துள்ளனர்.
இந்நிலையில் மழையால் 70 ஆயிரம் வீடுகள் வரை நீரில் மூழ்கியுள்ளதுடன் இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ளதாகவும் ஒருவரை காணவில்லை என்றும் செய்திகள் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளில் மீட்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.