குக்கரை திருமணம் செய்த இந்தோனேசிய இளைஞர் ; அது அரிசியை மட்டுமே வேக வைப்பதால் 4 நாட்களின் விவாகரத்து

உலகில் பல்வேறு வகையான விந்தையான சம்பவங்கள் ஒவ்வொரு நாளும் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. சமூக வலைதளங்கள் வந்ததில் இருந்து, அவை இந்த வினோதங்கள் இன்னும் வேகமெடுத்துள்ளன.

அந்த வரிசையில், இந்தோனேசியாவை சேர்ந்த கொய்ருல் அனம் என்ற இளைஞர், அரிசி வேக வைக்கும் குக்கரை திருமணம் செய்து கொண்டார். இது தொடர்பாக சமூக வலைதளங்களில் அவர் பதிவிட்ட புகைப்படத்தில், குக்கரை மணப்பெண் போல அலங்காரம் செய்தும், இவர் திருமண உடையில் நிற்பது போன்றும், திருமணத்துக்கான பதிவில் கையெழுத்திடும் போது குக்கர் அருகில் இருப்பது போன்றும் புகைப்படங்கள் இடம்பெற்றிருந்தன. குக்கருக்கு அவர் முத்தமிடுவது போன்ற புகைப்படத்தையும் அவர் பகிர்ந்திருந்தார்.

குக்கரை முறைப்படி திருமணம் செய்து கொண்டதாக கூறிய அவர், குக்கர் நான் சொல்வதை கேட்கிறது, உணவு வேக வைத்து தருகிறது, அன்பாக இருக்கிறது என்றும் கொய்ருல் அனம் பதிவிட்டது சமூக வலைதளங்களில் வைரலானது.

இந்த நிலையில், குக்கரை திருமணம் செய்து 4 நாட்களில் அதனை விவாகரத்து செய்து விட்டதாக கொய்ருல் அனம் தெரிவித்துள்ளார். குக்கர் அரிசியை மட்டுமே வேக வைக்கிறது என்பதால் விவாகரத்து செய்துவிட்டதாக அவர் விளக்கம் அளித்துள்ளார். சமூக வலைதளங்களில் கவனம் ஈர்ப்பதற்காகவே அவர் இவ்வாறு செய்ததாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

“கொய்ருல் அனம் நன்கு அறியப்பட்ட பிரபலம். அவர் அவரைப் பின்தொடர்பவர்களின் பொழுதுபோக்கிற்காக பல்வேறு சாகசங்களை செய்து வருகிறார். குக்கருடனான அவரது திருமணம் ஏற்படுத்திய பரபரப்பைப் பார்த்தால் சமூக ஊடக புகழுக்கான தேடலில் அவர் வெற்றி பெற்றதாக தெரிகிறது” என்று உள்ளூர் செய்தி வலைதளங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here