“ஏர் இந்­தியா நிறு­வ­னத்தை” வாங்கியது ‘டாடா’ குழுமம் ­

ஏர் இந்­தியா நிறு­வ­னத்தை டாடா நிறு­வ­னம் வாங்கி ­உள்­ளது. இத்­த­க­வலை மத்­திய அரசு அதி­கா­ர­பூர்­வ­மாக அறி­வித்­துள்­ளது.

கடந்த சில தினங்­க­ளுக்கு முன்பே ஏர் இந்­தி­யாவை டாடா குழு­மம் கைப்­பற்றி உள்­ள­தா­கத் தக­வல் பர­வி­யது. எனி­னும், மத்­திய அரசு அதை உறுதி செய்­ய­வில்லை.

மத்­திய அர­சின் பொதுத்­துறை நிறு­வ­ன­மான ஏர் இந்­தியா கடந்த பல ஆண்­டு­க­ளா­கவே தொடர் நஷ்­டத்­தில்­தான் இயங்கி வந்­தது.

கடந்த காலங்­களில் மத்­திய அரசு பல்­வேறு சலு­கை­களை அளித்து வந்­த­தால் ஏர் இந்­தியா நிர்­வா­கம் நிலை­மையை ஓர­ளவு சமா­ளித்து வந்­தது.

ஒரு கட்­டத்­தில் அந்­நி­று­வ­னத்தை விற்­பது என மத்­திய அரசு முடிவு செய்­ததை அடுத்து, அது­கு­றித்த அறி­விப்பு வெளி­யா­னது. எனி­னும் ஏர் இந்­தி­யா­வுக்கு இருந்த கடன் சுமை கார­ண­மாக பெரிய நிறு­வ­னங்­கள் அதை வாங்க முன்­வ­ர­வில்லை. சில நிறு­வ­னங்­கள் மட்­டுமே விண்­ணப்­பித்த நிலை­யில், டாடா நிறு­வ­னம் ஏலத்­தில் வெற்றி பெற்­ற­தாக மத்­திய அரசு நேற்று அறி­வித்­தது.

இதை­ய­டுத்து, ‘ஏர் இந்­தியா மீண்­டும் வருக’ என டாடா குழு­மத்­தின் தலை­வ­ரான ரத்­தன் டாடா டுவிட்­ட­ரில் பதி­விட்­டுள்­ளார்.

ஏர் இந்­தி­யாவை வாங்கி இருப்­பது மிகச்­சி­றந்த செய்தி என்­றும், இது விமா­னப் போக்­கு­வ­ரத்­துத் துறை­யில் மிக வலு­வான சந்தை வாய்ப்­பு­களை அளிக்­கும் என்­றும் அவர் குறிப்­பிட்­டுள்­ளார்.

மேலும், டாடா குழு­மத்­தின் முன்­னாள் தலை­வ­ரான ஜேஆர்டி டாடா தான் ஏர் இந்­தியா நிறு­வனத்தை நிறு­வி­ய­வர் ஆவார். 68 ஆண்­டு­க­ளுக்கு முன்பு ஏர் இந்­தியா நாட்­டு­ட­மை­யாக்­கப்­பட்­டது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here