வாடகை வசூலிக்க சென்ற போது, ஏற்பட்ட சண்டையில் ஆடவர் பலி

கோலாலம்பூர்: கங்கார், பெர்லிஸ் அருகே கம்போங் குவார் சாபுன், பத்து பகாட்டில், நேற்று இரவு வீட்டு வாடகை கொடுப்பதில் தொடர்புடையதாகக் கருதப்படும் சண்டையில் ஈடுபட்ட ஒருவர் கைகள் கட்டப்பட்ட நிலையில் இறந்து கிடந்தார்.

நேற்று இரவு 8.30 மணியளவில் நடந்த சம்பவத்தில், கமாருல் இசஹார் மாட் நன்யான் (49) என்பவரின் உடலின் நெற்றியில் சிறிய காயங்களுடன் வீட்டின் வேலிக்கு அருகில் கிடப்பதை அவரது உறவினர்கள் கண்டுபிடித்ததாக கங்கார் மாவட்ட காவல்துறைத் தலைமை அதிகாரி வாரி கியூ கூறினார்.

பாதிக்கப்பட்டவரது உடல் கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து, விசாரணைக்கு உதவுவதற்காக 39 முதல் 55 வயதிற்குட்பட்ட நான்கு ஆண்கள் கைது செய்யப்பட்டனர்.

பாதிக்கப்பட்ட நபர், ஒருவரிடமிருந்து வாடகை வசூலிப்பதற்காக ஒரு வீட்டிற்குச் சென்றதாக நம்பப்பட்டது, ஆனால் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் முற்றி, பாதிக்கப்பட்டவருக்கு எதிராக அந்த நபர் ஒரு பாராங் கத்தியை பயன்படுத்தும் அளவு வரை சென்றது.

“கோபமடைந்த பாதிக்கப்பட்டவர் ஒரு காரின் கண்ணாடியை வெட்டி, அந்த நபரை காயப்படுத்தினார், சண்டையை தீர்க்கும் முன்னர், அங்கிருந்த பல குடியிருப்பாளர்கள் பாதிக்கப்பட்டவரின் கைகளை கட்டினார்” என்று அவர் பெர்னாமாவிற்கு மேற்கோள் காட்டிய அறிக்கையில் கூறினார்.

பாதிக்கப்பட்டவர் பின்னர் அசைவற்ற நிலையில் காணப்பட்டதாகவும் பின்னர் அவர் இறந்துவிட்டதாகக் கூறினார், அதே நேரத்தில் காயமடைந்தவர் துவாங்கு ஃபவுசியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.

கமாருலின் உடல் பிரேத பரிசோதனைக்காக அலோர்ஸ்டாரில் உள்ள சுல்தானா பாஹியா மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், இந்த வழக்கு குற்றவியல் சட்டம் பிரிவு 302 இன் கீழ் விசாரிக்கப்பட்டு வருகின்றது என்றும் அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here