2021ஆம் ஆண்டின் அமைதிக்கான நோபெல் பரிசு, பிலிப்பீன்ஸ், ரஷ்ய செய்தியாளர்களுக்கு நேற்று அறிவிக்கப்பட்டது.
அமைதி, ஜனநாயகத்திற்கான அடிப்படையாக கருத்து சுதந்திரம் இருப்பதை வலியுறுத்தியதற்காக பிலிப்பீன்சைச் சேர்ந்த செய்தியாளர் மரியா ரெஸ்ஸாவுக்கும் ரஷ்யாவைச் சேர்ந்த செய்தியாளர் டிமிட்ரி முரடோவுக்கும் அமைதிக்கான நோபெல் பரிசு பகிர்ந்தளிக்கப்பட்டது.
“ராப்ளர் என்ற செய்தி தளத்தின் துணை நிறுவனரான மரியா ரெஸ்ஸா, பிலிப்பீன்சில் வளர்ந்து வரும் சர்வாதிகாரத்தை, அதிகார துஷ்பிரயோகத்தை அம்பலப்படுத்த தனது கருத்து சுதந்திரத்தைப் பயன்படுத்தினார்.
“நோவாஜா கெஜெட்டா என்ற செய்தித்தாளின் துணை நிறுவனரான டிமிட்ரி முரடோவ், பல ஆண்டுகளாக கடும் சவாலான சூழ்நிலையில் ரஷ்யாவில் கருத்து சுதந்திரத்தைப் பாதுகாத்து வந்தவர்,” என்று நோபெல் தேர்வுக் குழு பாராட்டி உள்ளது.