பாசிர் மாஸ்: கோவிட் -19 தடுப்பூசியை ஏற்க மறுத்த பதினேழு தனிநபர்கள் தங்கள் உரிமைகளை நிலைநாட்டக்கோரி போலீஸில் புகார் செய்துள்ளனர்.
பாசிர் மாஸ் போலீஸ் தலைமை துணை கமிஷனர் நசாருடின் முஹமட் நசீர் இது பற்றிக்கூறுகையில், அவர்கள் இந்த ஆண்டு ஜனவரி முதல் செப்டம்பர் மாதங்களுக்கு இடையே தனித்தனியாக அறிக்கைகளை தாக்கல் செய்தனர் என்றார்.
புகாரளித்த 17 பேரும் 30 முதல் 50 வயதுக்கு உட்பட்டவர்கள் என்றும் அவர் கூறினார்.
“நாங்கள் (போலீஸ்) அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாது, இப்புகார்களை மாநில சுகாதாரத் துறைக்கு பரிந்துரைப்போம்,” என்று அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறினார்.
17 பேரும் சமூகத்தின் பல்வேறு நிலைகளைச் சேர்ந்தவர்கள் என்றும் அவர்கள் பல்வேறு மதப் பின்னணியைச் சேர்ந்தவர்கள் என்றும் நசாருடின் கூறினார்.
நிலையான இயக்க செயல்முறை (SOP) தொடர்பான தங்கள் செயல்பாடுகளை போலீஸ் தொடங்கியுள்ளதாகவும் அவர் கூறினார்.