PTPTN கடனை முழுமையாக திருப்பிச் செலுத்துவோருக்கு 15 விழுக்காடு தள்ளுபடி

கோலாலம்பூர்: நவம்பர் 1 முதல் ஏப்ரல் 30, 2022 வரை தேசிய உயர்கல்வி நிதிக் கழகத்திற்கு (PTPTN) கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கான தள்ளுபடியை வழங்க அரசாங்கம் ஒப்புக்கொண்டுள்ளது. நிதியமைச்சர் தெங்கு டத்தோஸ்ரீ ஜஃப்ருல் அப்துல் அஜிஸ், கடனை முழுமையாகச் செலுத்துவோருக்கு கடனில் இருந்து 15 விழுக்காடு தள்ளுபடி வழங்குவதாகக் கூறினார்.

மீதமுள்ள கடனில் குறைந்தபட்சம் 50%  ஒருமுறை செலுத்தினால் 12 விழுக்காடு தள்ளுபடியும், சம்பளக் குறைப்பு அல்லது அட்டவணைப்படி நேரடிப் பற்று மூலம் திருப்பிச் செலுத்துவதற்கு 10 சதவிகிதம் தள்ளுபடியும் என்று அவர் 2022 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டைத் தாக்கல் செய்யும் போது இன்று மக்களவையில் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here