நாளை நவ.3 முதல் 16 வரை ரவூப் கம்போங் ஓராங் அஸ்லி சதாக்கில் EMCO அமல்

மேம்படுத்தப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவு, பகாங், ரவூப்பில் உள்ள பத்துவின் துணை மாவட்டமான கம்போங் ஒராங் அஸ்லி சதாக்கில் புதன்கிழமை (நவம்பர் 3) தொடங்கி நவம்பர் 16 வரை அமல்படுத்தப்படும். சுகாதார அமைச்சின் இடர் மதிப்பீடு மற்றும் உள்ளூர் கோவிட்-19 தொற்று போக்கு ஆகியவற்றின் மதிப்பிட்டில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தேசிய பாதுகாப்பு கவுன்சில் இயக்குநர் ஜெனரல் டத்தோ ரோட்ஸி முகமட் சாட் தெரிவித்தார்.

செவ்வாய்க்கிழமை (நவம்பர் 2) ஒரு முகநூல் பதிவில், “அனைத்து EMCO களுக்கான நிலையான இயக்க நடைமுறை (SOP) முன்பு அறிவிக்கப்பட்டதைப் போலவே உள்ளது” என்று அவர் கூறினார். நாட்டில் மேம்படுத்தப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவின் கீழ் உள்ள எந்தப் பகுதிகளும் இன்று நீட்டிக்கப்படவோ  அல்லது முடிவுக்கோ வரவில்லை என்று ரோட்ஸி மேலும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here