இன்று 6,243 பேருக்கு கோவிட்-19 புதிய தொற்று உறுதி

கோப்புப்படம்

கோலாலம்பூர், நவம்பர் 10:

கடந்த 24 மணி நேரத்திற்குள் 6,243 பேருக்கு கோவிட் -19 தொற்று உறுதிச்செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நேற்றைய 5,403 தொற்றுக்களுடன் ஒப்பிடும்போது, ​​இன்று சற்று அதிகரித்துள்ளது.

இதுவரை நாட்டில் ஏற்பட்ட மொத்த கோவிட் -19 தொற்றுக்களின் எண்ணிக்கை 2,522,498 ஆக உயர்ந்துள்ளது என்று சுகாதார இயக்குநர் ஜெனரல் டாக்டர் நோர் ஹிஷம் அப்துல்லா டுவிட்டர் தளத்தில் ஒரு பதிவின் மூலம் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here