மின்சார பொருள்கள் விற்பனை கடையில் தீ

செகாமட் ஜாலான் ரஹ்மத் மூசா கம்போங் அப்துல்லாவில் உள்ள எலக்ட்ரிக்கல் கடை திங்கள்கிழமை (நவ. 15) அதிகாலை தீயில் எரிந்து நாசமானது. பண்டார் பாரு செகாமட் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறைத் தலைவர் மசுகி இஸ்மாயில் திணைக்களத்திற்கு அதிகாலை 3.02 மணிக்கு அவசர அழைப்பு வந்ததாகக் கூறினார்.

பண்டார் பாரு செகாமட் மற்றும் செகாமட் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறைகளைச் சேர்ந்த 18 தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டனர் என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

இரண்டு தீயணைப்பு மீட்பு டெண்டர்கள் (FRT), அவசர மருத்துவப் பதில் சேவை (EMRS) வாகனங்கள் மற்றும் பண்டார் பாரு செகாமாட் நிலையம் மற்றும் செகாமட் நிலையத்திலிருந்து தண்ணீர் டேங்கர்கள் ஆகியவை நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டதாக மசுகி கூறினார்.

ஒரு பல்பொருள் அங்காடிக்கு அருகில் அமைந்துள்ள கடையின் 60% தீ எரிந்து நாசமானது என்று அவர் கூறினார். இந்த தீ விபத்தில் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை என்றும், தீவிபத்துக்கான காரணம் மற்றும் ஏற்பட்ட இழப்புகள் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் மசுகி கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here