டுவிட்டர் நிறுவனத்தின் புதிய தலைமை அதிகாரியாக (C.E.O) இந்தியர் நியமனம்

சமூக வலைதளங்களில் முன்னனியில் உள்ளது டுவிட்டர் நிறுவனத்தின் புதிய தலைமை அதிகாரியாக (C.E.O) இந்தியரான பராக் அகர்வால் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக ட்விட்டர் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இதுவரை ஜாக் டோர்சி செயல்பட்டு வந்தார். இவர் திடீரென தமது பதவியை ராஜினாமா செய்தார்.

இந்நிலையில், இப்புதிய நியமனத்தை டுவிட்டர் அறிவித்துள்ளது. பராக் அகர்வால் மும்பை ஐ.ஐ.டி.யில் படித்தவர். 10 ஆண்டுகளாக டுவிட்டர் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். அவர் படிப்படியாக பதவி உயர்வு பெற்று, தற்போது இந்நிலைக்கு உயர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here