சிங்கப்பூரில் இருவருக்கு ‘ஓமிக்ரான்’ தொற்று

தென்­னாப்­பி­ரிக்­கா­வில் இருந்து புறப்­பட்டு சிங்­கப்­பூர் வந்­தி­றங்­கிய பய­ணி­கள் இரு­வ­ருக்கு முதற்­கட்­டப் பரி­சோ­த­னை­யில் ‘ஓமிக்­ரான்’ தொற்று உறுதி செய்­யப்­பட்­டுள்­ள­தாக சுகா­தார அமைச்சு நேற்று தெரி­வித்­தது.

பாதிக்­கப்­பட்­ட­தா­கக் கூறப்­படு­வோ­ரில் ஒரு­வர் 44 வயது சிங்­கப்­பூர் நிரந்­த­ர­வாசி, மற்­றொ­ரு­வர் 41 வயது சிங்­கப்­பூ­ரியர் ஆவார்.

மொஸாம்­பிக்­கி­லி­ருந்து ஜொகன்­னஸ்­பர்க் வழி சிங்­கப்­பூர் வந்த அந்த 44 வயது ஆட­வர், நவம்­பர் 29ஆம் தேதி­யன்று செய்து­கொண்ட கொவிட்-19 பரி­சோ­த­னை­யில் அவ­ருக்­குத் தொற்று இல்லை என்று உறு­தி­செய்­யப்­பட்­டது. அதே­போன்று அந்த 41 வயது மாது­வும் பரி­சோ­தனை செய்­து­கொண்டு தொற்று இல்லை என்று உறு­தி­செய்­யப்­பட்­ட­வர்.

இரு­வ­ரும் நேற்று முன்­தி­னம் சிங்­கப்­பூர் வந்­தி­றங்­கி­ய­வு­டன் தனி­மைப்­ப­டுத்­தப்­பட்­ட­னர். தொற்­று­நோய்­க­ளுக்­கான தேசிய நிலை­யத்­தில் அவ்­வி­ரு­வரும் தனி­மைப்­ப­டுத்­தப்­பட்டு சிகிச்சை அளிக்­கப்­பட்டு வரு­வ­தாக அமைச்சு கூறி­யது.

கொவிட்-19க்கு எதி­ராக முழு­மை­யா­கத் தடுப்­பூசி போட்­டுக்­கொண்­டுள்ள அவர்­க­ளி­டம் இரு­மல் உள்­ளிட்ட மித­மான அறி­குறி­கள் தென்­பட்­டன.

தென்­னாப்­பி­ரிக்­கா­வின் ஜொகன்­னஸ்­பர்க் நக­ரி­லி­ருந்து புறப்­பட்டு சிங்­கப்­பூர் ஏர்­லைன்ஸ் விமா­னத்­தில் அவ்­வி­ரு­வ­ரும் நேற்று முன்­தினம் சிங்­கப்­பூர் வந்­தி­றங்­கி­னர். வந்­தி­றங்­கி­ய­வு­டன் அவர்­கள் ‘பிசி­ஆர்’ பரி­சோ­த­னைக்கு உட்­ப­டுத்­தப்­பட்­ட­னர்.

இந்­நி­லை­யில் இரு­வ­ருக்­கும் தொற்­றி­யது ‘ஓமிக்­ரான்’ கிருமி வகை­தானா என்­பதை தேசிய பொதுச் சுகா­தார ஆய்­வுக்­கூ­டம் ஆராய்ந்து வரு­கிறது. இரு­வ­ரு­டன் ஒரே விமா­னத்­தில் பய­ணம் செய்த மற்ற 19 பய­ணி­க­ளுக்கு கோவிட்-19 தொற்று இல்லை என்று உறு­திப்­படுத்­தப்­பட்­டுள்­ளது. 10 நாட்­கள் தனிமை உத்­த­ரவு முடிந்­த­பின் மீண்­டும் ‘பிசி­ஆர்’ பரி­சோ­த­னையை அவர்­கள் செய்­து­கொள்ள வேண்­டும்.

இதற்­கி­டையே, புதிய ‘ஓமிக்­ரான்’ உரு­மா­றிய கிரு­மி­யால் ஏற்­படக்­கூ­டிய கடும் பாதிப்­பு­க­ளுக்கு எதி­ரான பாது­காப்­பைத் தடுப்­பூசி­கள் வழங்­கும் சாத்­தி­யம் அதி­கம் என்று உல­கச் சுகா­தார நிறு­வ­னம் தெரி­வித்­துள்­ளது.

கொள்­ளை­நோய்க்கு எதி­ரா­கப் போரா­டு­வ­தில் மிகப் பய­னுள்ள ஆயு­த­மா­கக் கரு­தப்­படும் தடுப்­பூ­சியை இப்­புது வகை கிருமி ஆற்­ற­லில் மிஞ்­சி­வி­ட­லாம் என்று மக்­க­ளி­டையே எழுந்­துள்ள கவ­லை­யைத் தணிக்க நிறு­வ­னம் இவ்­வாறு கூறி­யி­ருந்­தது.

“தடுப்­பூ­சி­கள் ஒரு­வி­தப் பாது­காப்பை வழங்­கு­கின்­றன என்­பது நாம் அறிந்­ததே. இருப்­பி­னும், பாது­காக்­கும் ஆற்­றல் குறைந்­துள்­ளதா என்­பதை நாம் கண்­ட­றிய வேண்­டும். ஆனால், மற்ற உரு­மா­றிய கிருமி வகை­க­ளுக்கு எதி­ரான பாது­காப்பை அளிக்­கும் தடுப்­பூசி­களால் கடும் நோயை எதிர்க்க முடி­யும் என்று கரு­து­கிறோம்,” என்று செய்­தி­யா­ளர் கூட்­டத்­தில் நிறு­வ­னத்­தின் தலைமை விஞ்­ஞானி சௌமியா சுவா­மி­நா­தன் கூறி­னார்.

இதற்­கி­டையே ‘ஓமிக்­ரான்’ வகை­யைக் கையாள்­வ­தற்­கென புதிய தடுப்­பூ­சி­கள் தேவைப்­ப­டு­வ­தாக ‘மொடர்னா’ நிறு­வ­னத்­தின் தலைமை நிர்­வாக அதி­காரி கூறி­யுள்­ளார். ‘ஓமிக்­ரான்’ வகை­யைக் குறி­வைக்­கும் ஆற்­றல் கொண்ட கொவிட்-19 கூடு­தல் தடுப்­பூசி, அடுத்த ஆண்டு மார்ச் மாதம் அமெ­ரிக்­கா­வின் பயன்­பாட்­டுக்கு வர­லாம் என்­றும் நிறு­வ­னம் தெரி­வித்­தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here