பாரிஸ்: 1992 ஆம் ஆண்டு மொபைல் போன் மூலம் அனுப்பப்பட்ட முதல் குறுஞ்செய்தி, செவ்வாய்கிழமை NFT ஆக ஏலத்தில் 107,000 யூரோக்களுக்கு (508,002 மலேசிய வெள்ளி) விற்கப்பட்டது என்று அகுட்ஸ் ஏல நிறுவனம் தெரிவித்துள்ளது.
வாங்குபவர், யார் என்ற அடையாளம் வெளியிடப்படவில்லை. ஆனால் தொழில்நுட்பத் துறையில் ஈடுபட்டுள்ள ஒரு கனடியர், இப்போது ஃபங்கிபிள் அல்லாத டோக்கன் அல்லது NFT வடிவத்தில் முதல் SMS செய்தியின் தனித்துவமான டிஜிட்டல் பிரதியின் உரிமையாளராக உள்ளார்.
வோடஃபோன் ஊழியர் ரிச்சர்ட் ஜார்விஸுக்கு “Mery Chrisrmas” என்று 15 எழுத்துகள் கொண்ட செய்தி அனுப்பப்பட்டது. NFT கள் பிளாக்செயின் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வாங்க மற்றும் விற்கக்கூடிய டிஜிட்டல் பொருட்கள். இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஏலத்தில் ஏறக்குறைய 70 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு விற்கப்பட்ட கலைப்படைப்புகள் உட்பட சேகரிப்பாளர்களுக்கு அவை மிகவும் பிரபலமாகிவிட்டன.
ஏல மண்டபத்தில் இருந்தவர்களில் 18 வயதான பிளாக்செயின் தொழிலதிபர் லூய்கி கரடோனாவும் இருந்தார். அவர் விலை 75,000 யூரோக்களுக்கு மேல் உயர்ந்தபோது ஏலத்தில் இருந்து வெளியேறினார்.
இந்த வரலாற்றை அடுத்த ஆண்டு வரை ஒரு சொத்தாக வைத்திருப்பது மற்றும் அடுத்த கிறிஸ்துமஸில் அதை விற்பது சுவாரஸ்யமாக இருக்கும் என்று நான் நினைத்தேன் என்று அவர் AFP இடம் கூறினார்.
மொபைல் நெட்வொர்க் ஆபரேட்டர் வோடபோன், அதன் விற்பனை மூலம் கிடைக்கும் வருமானத்தை ஐநாவின் அகதிகள் நிறுவனத்திற்கு நன்கொடையாக வழங்க திட்டமிட்டுள்ளதாக கூறியுள்ளது.