24 மணி நேர கோவிட் தொற்று 3,160 – குணமடைந்தோர் 4,421

சுகாதார அமைச்சகம் கடந்த 24 மணி நேரத்தில் 3,160 கோவிட் -19 தொற்றுகள் பதிவு செய்துள்ளது. இது நேற்று பதிவான 3,528 தொற்றுகளில் இருந்து சிறிது குறைவு. ஒரு அறிக்கையில், சுகாதார தலைமை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா, மொத்த நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை இப்போது 2,738,401 வழக்குகளாக உள்ளது என்றார்.

4,421 நோயாளிகள் குணமடைந்துள்ளனர். அதே நேரத்தில் 324 நோயாளிகள் தீவிர சிகிச்சையில் உள்ளனர். அவர்களில் 253 பேர் கோவிட் -19 தொற்று எனவும்  மற்றும் 71 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படுகிறார்கள். மொத்தம் 324 நோயாளிகளுக்கு சுவாச உதவி தேவைப்படுகிறது. 253 நோயாளிகள் கோவிட்-19  தொற்றும் மற்றும் மீதமுள்ள 71 பேருக்கு தொற்று இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறார்கள்.

இன்று 3,004 உள்ளூர் நோய்த்தொற்றுகள் உள்ளன. இதில் 2,877 மலேசியர்கள் மற்றும் 127 வெளிநாட்டினர் மற்றும் 156 இறக்குமதி செய்யப்பட்ட தொற்றுகள் உள்ளன. இவர்களில், நோயறிதலின் போது 2.1% நோயாளிகள் மட்டுமே வகை 3, 4 அல்லது 5 இல் இருந்தனர். இன்று மூன்று கொத்துகள் பதிவாகியுள்ளதாக நூர் ஹிஷாம் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here